தாய்லாந்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணங்களை அனுமதிக்கும் மசோதாவிற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சமூகத்தில் பல்வேறு பாலினங்கள் உள்ளது. ஆனால் ஆண், பெண் என்ற இரு பாலினங்களை மட்டும் அங்கீகரிக்கும் சூழல் பல நாடுகளில் நிலவுகிறது. பிற பாலினங்களை அங்கீகரிக்க மறுப்பதும், ஏராளனத்திற்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. பிற பாலினத்தவர்களை தங்களது பெற்றோர்களே ஏற்றுகொள்ளாத நிலையில், பொது சமூகமும் புறக்கணிப்பதால், பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
உலகில் எல்ஜிபிடி(LGBT) சமூக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக பெரிதும் போராடி வருகின்றனர்.சில அரசாங்களும் அவர்களுக்கான மரியாதையையும், உரிமையையையும் சட்டபூர்வமாக அங்கீகரித்து வருகின்றது.
ஆசியாவில் முதன் முதலாக ஒரே பாலினத் தம்பதிகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளித்தது. ஒரே பாலினத் தம்பதிகளை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த ஆசியாவின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக இப்போது தாய்லாந்து ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
தாய்லாந்தில் LGBT சமூகத்தினர் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை ஆதரிக்க வேண்டும் என்று போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணங்களை அனுமதிக்கும் மசோதாவிற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம் இந்த திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் தென் – கிழக்கு ஆசிய நாடு என்ற பெருமையை தாய்லாந்து பெற்றது.